Skip to main content

ஜனாதிபதி விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Mamata Banerjee Attends President's Dinner

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். 

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செப்டம்பர் 9 ஆம் தேதி விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி திரெளபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்கள், உள்நாட்டுத் தலைவர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்று குறிப்பிடுவதற்குப் பதில் ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஜி20 விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி திரெளபதி முர்முவின் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜி-20’ மாநாட்டில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கவும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாடே வணங்குகிறது' - குடியரசு தலைவர் பெருமிதம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

 'The country bows down' - the President of the Republic is proud

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். இந்த சம்பவத்தில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி சுமார் 17 நாட்களாக நடைபெற்று, இன்று உண்மையிலேயே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

ஒரு தொழிலாளரை வெளியே அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இந்த மீட்புப் பணி முற்றிலுமாக வெற்றி அடைந்துள்ளது என தேசிய பேரிடர் மீட்புப்படை அறிவித்துள்ளது.

 

nn

 

அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகின்றனர். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்ட தொழிலாளர்களை நாடே வணங்குகிறது. அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த முயற்சியால் தான் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும், மீட்புப் படையினருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

 

latha rajinikanth meets Droupadi Murmu

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். பின்பு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார். 

 

இதையடுத்து சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில் திரௌபதி முர்முவை நடிகை மதுவந்தி தனது குடும்பத்தினருடன் வரவேற்றார். அப்போது அவருடன் லதா ரஜினிகாந்த், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.