Skip to main content

மாறுவேடத்தில் சென்று ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்த போலீசார்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

madhya pradesh mahatma gandhi memorial  medical college ragging issue police action

 

மருத்துவக் கல்லூரி ஒன்றில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை, மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்குப் புகார் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு வழக்குத் தொடர்பாக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

 

ராகிங் நடப்பதாக மட்டுமே தெரிந்திருந்த நிலையில், ராகிங்கில் ஈடுபட்டவர்கள் யார், எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்ற விவரம் ஏதும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. இதனால் மாற்று வழியை யோசித்த போலீசார், தாங்களே மருத்துவக் கல்லூரிக்கு மாறுவேடத்தில் சென்று உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து 24 வயதான பெண் காவலர் ஷாலினி சவுகான் மருத்துவக் கல்லூரி மாணவி வேடத்தில் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார். மேலும், ஒரு பெண் காவலர் செவிலியர் வேடத்திலும் இரண்டு ஆண் தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்களாகவும் சென்று அங்குள்ள மாணவர்களிடம் நெருங்கிப் பழகி உள்ளனர்.

 

மேலும், இவர்கள் தொடர்ந்து மாணவர்களிடம் பழகி வந்ததில் ராகிங் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. ராகிங்கில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் அடையாளம் கண்டு அவர்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வந்தனர். இதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்ததோடு மட்டுமின்றி, வழக்குத் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது காவல்துறையினர் வசம் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களை வைத்து ராகிங் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரைக் காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர். மருத்துவக் கல்லூரி சார்பில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தற்போது 11 பேரையும் மூன்று மாதங்களுக்குக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.