Skip to main content

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Lookout notice against Popular Front of India leaders!


தலைமறைவாக உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. இதில் கேரளாவில் நடந்த சோதனையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள், கலவரமாக மாறி, அம்மாநில அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை,வழக்குப்பதிவு செய்தது. 

 

அந்த அமைப்பைச் சேர்ந்த அப்துல் சதார், சீரூப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதால், தேசிய புலனாய்வு முகமை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

 

முன்னதாக, வன்முறையின் போது சேதமடைந்த 71 பேருந்துகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனை; மேலும் 5 பேர் கைது

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

NIA raid conducted in Tamil Nadu; 5 more arrested

 

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல் மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

தேனி கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டில் சோதனை நடைபெற்றது. சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்த சோதனையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் ரஸாக், முகமது யூசுப், முகமது அப்பாஸ், கெய்ஸர், சாதிக் அலி ஆகியோர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் டிஜிட்டல் ஆயுதங்கள், ஆவணங்கள், சட்ட விரோத ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Next Story

உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

NIA in Ukkadam Officials study!

கார் வெடிப்பு நடந்த உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

 

கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி அன்று கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெடிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக காவல்துறையின் தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கார் வெடிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம், தமிழக காவல்துறை அதிகாரிகள் ஒபபடைத்தனர். 

 

இதன் தொடர்ச்சியாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதி முழுவதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.