Skip to main content

ராகுலுக்கு வழி காட்டும் லட்சத்தீவு எம்.பி. வழக்கு! 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Lakshadweep mp faizal case

 

லட்சத்தீவின் தலைநகரமான கவரட்டியில் உள்ள கவரட்டி நீதிமன்றம், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினரான முகமது ஃபைசலை கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றச் செயலகம், முகமது ஃபைசலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது. 

 

முகமது ஃபைசல், கவரட்டி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி கவரட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், முகமது ஃபைசலின் 10 ஆண்டுக் கால சிறைத்தண்டனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்த வழக்கில் லட்சத்தீவு நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீட்டில், கேரளா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. 

 

இந்த உத்தரவைத் தொடர்ந்து முகமது ஃபைசல் நாடாளுமன்ற செயலகத்திற்கு, தீர்ப்புக்கும் சிறைத் தண்டனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதினார். அதேபோல், அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் சார்பிலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, முகமது ஃபசலின் எம்.பி. பதவி திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றச் செயலகம் முகமது ஃபைசல் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறாமல் இருந்தது. இதன் காரணமாக முகமது ஃபைசல், ‘சிறைத் தண்டனைக்கும் தீர்ப்புக்கும் தடை வாங்கி இரண்டு மாதங்கள் கடந்தும் நாடாளுமன்றம் என் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறவில்லை’ என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

 

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றச் செயலகம், முகமது ஃபைசல் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. 

 

Lakshadweep mp faizal case

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதே தீர்ப்பில் சூரத் நீதிமன்றம், ராகுல் மேல்முறையீடு செய்துகொள்ள ஒரு மாதம் அவகாசம் வழங்கியது. ஒருவேளை ராகுல், மேல்முறையீடு செய்து சூரத் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வாங்கினால் ராகுலின் எம்.பி. பதவி மீண்டும் அவருக்குத் திரும்ப வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.