Skip to main content

அல்லி மலர் குளம்... ஸ்டேசனை சுற்றி காய்கறி தோட்டம்! காவல் உதவி ஆய்வாளரின் அசத்தல் ஐடியா!!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காலாவதியான வாகனங்கள் ஒருபக்கம், இப்போது உபயோகிக்கும் வாகனங்கள் மறு பக்கம் என, நம்ம ஊர் காவல் நிலையங்களை பார்த்து பழகியவர்களுக்கு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கும்.

kerala state malappuram district police station surrounding lake, fish farm , sub inspector

 மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளம் காவல் நிலையத்தை பார்த்தால் ஒரு காய்கறித் தோட்டத்திற்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கும். ஒரு பக்கம் மீன்குட்டை, மறுபக்கம் காய்கறி தோட்டம். இன்னொரு பக்கம் பூத்துக்குலுங்கும் மலர்கள் என விழிகளை விரிய வைக்கின்றன. அங்கு முன்பு காவல் உதவி ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட், காவல் நிலையத்திற்கு அருகிலேயே 2 குளங்களை வெட்டி அதில் மீன்பண்ணை அமைத்திருக்கிறார். குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதும், அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குவதும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.

kerala state malappuram district police station surrounding lake, fish farm , sub inspector

இன்னொரு பக்கம் காய்கறி தோட்டத்தையும் அமைத்திருக்கிறார் ஆல்பர்ட். அவர், வேறு காவல் நிலையத்திற்கு மாறி சென்றாலும், இந்த காவல் நிலையம் அருகே குடியிருப்பு இருப்பதால், காய்கறித் தோட்டத்தை அவரது மனைவி பீனா கவனித்து வருகிறார். மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி நீண்ட காலமாக சங்கரம் குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பாடியில் பிளாஸ்டிக் தார்ப்பாய் போட்டு, அதனையே குளமாக மாற்றி அதில் வண்ண மீன்கள் வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த லாரியை அண்மையில் ஏலம் விட்டதால், ஸ்டேசனுக்கு அருகேயே மீன்பண்ணையை ஏற்படுத்தி இருக்கிறார் ஆல்பர்ட். 

kerala state malappuram district police station surrounding lake, fish farm , sub inspector


இதுதொடர்பாக ஆல்பர்ட்டை தொடர்பு கொண்டு பேசினோம். "சங்கரம்குளம் என்ற ஊர் பெயரிலேயே 'குளம்' இருக்கும்போது, காவல் நிலையத்தில் இருப்பது தப்பு இல்லையே என்றவர். இயற்கை விவசாயத்தை நான் தொடங்கியுள்ளேன். மற்றவர்களும் பின்பற்றும்போது மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன்”என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.