Skip to main content

கேரளாவில் தொடர்ந்து குறையும் தினசரி கரோனா பாதிப்பு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

kerala

 

இந்தியாவில் அதிக தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.

 

இந்தநிலையில் அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி  11,079 பேருக்கு கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 9,246 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் நேற்று அம்மாநிலத்தில் 8,867 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இந்தநிலையில் கேரளாவில் இன்று தினசரி கரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று 7,955 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 57 உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 11,769 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்