Skip to main content

கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி... கர்நாடகாவில் குறையும் கரோனா தொற்று!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
jh

 

கர்நாடகாவில் இன்று 16,604 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 44,473 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 16,16,985 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,434 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,13,639 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 411 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 29,090 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று கரோனாவில் இருந்து 44,473 பேர் குணமாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 22,61,590 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தினசரி கரோனா பாதிப்பு இருந்த நிலையில், அது தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்