Skip to main content

கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கலவரம் வெடிக்கும் - முன்னாள் அமைச்சர் பேச்சு!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இதை அடிப்படையாக வைத்து வன்முறைகள் வெடித்துள்ளது. தில்லி பல்கலைகழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகிறது.



இந்நிலையில் கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கலவரம் வெடிக்கும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காதர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ஆளும் பாஜக அரசு கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. மாநிலமே பற்றி எரியும் என்று ஒரு முன்னாள் அமைச்சர் பேசுவது நல்லதல்ல என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''போட்டது மைக்... ஆனால் உடைஞ்சது என்னவோ...''- பார்த்திபன் உருக்கம்!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

'' Put Mike ... but what's broken is my mind '' - Parthiban melts!

 

அண்மையில் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே மேடையில் இந்த நிகழ்வுக்காக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

 

actor

 

அந்த வீடியோவில் பேசிய பார்த்திபன், ''என் பிரியமானவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம். 'மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் இவ்வளவு அகங்காரம் தேவையா?' இதுபோன்று இன்று யூடியூப்பில் வைரலாக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தூக்கிப் போட்டது மைக் ஆனால் உடைந்தது என்னமோ என்னோட மனசு. நேற்றிலிருந்து அது சம்பந்தமான குழப்பம். அது சரியா தவறா? என்ன நடந்துகொண்டோம்... இது நடிப்பா? இல்ல வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்படா? என்ற பேச்சு போகிறது. ஆனால் அது மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. வெறும் ஒரு சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல் மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் என்றவுடன் பரபரப்பாகிவிட்டது. என்ன நடந்தது தெரியல எனக்குள்ள ஏகப்பட்ட டென்ஷன். அங்கு நடந்த விஷயத்திற்காக நான் உடனே ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மன்னிப்பு கேட்டு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். ரோபோ சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் இது எனக்குள் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. சில தவறுகள் நடக்கும் பொழுது பின்னோக்கி சென்று கரெக்ட் பண்ண முடியாது. நீங்களெல்லாம் பார்த்திருப்பீங்க நானே ஒரு சின்ன பையன் மாதிரி இறங்கி எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கும்போது அந்த கோபம் எழுவது நியாயமானது. இருந்தாலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அந்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

Next Story

எனக்கு கல்யாணம் என்றதும் கோபப்பட்டாள்... அதனாலத்தான்... வாலிபர் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது கிருஷ்ணன் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சிவகாமசுந்தரி. வயது 45. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தனியார் கம்பெனியில் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு அருகில் மது பாட்டில்கள், அட்டைப்பெட்டி சீட்டுகள் படுக்கையாக விடுக்கப்பட்ட நிலையில் கிடந்தன.

 

young man



 

சிவகாமசுந்தரி மர்மமான முறையில் கொலை செய்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க கோரி அவ்வூர் மக்கள் சாலை மறியல் செய்தனர். குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை செய்து 26 வயதான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்கிற ஜெகதீசன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

 

ஜெயசீலன் அளித்த வாக்குமூலத்தில், நான் வீடுகளுக்கு சுற்றிலும் பாதுகாப்புக்காக மூங்கில் வேலி அமைத்துத் தரும் வேலை செய்து வருகிறேன். அதன் காரணமாக சிவகாமசுந்தரி வீட்டுக்கு வேலி அமைத்துக் கொடுத்தேன். அப்போது சிவகாம சுந்தரி எனக்கு அறிமுகமானார். அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டோம். இரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் கீழே இருவரும் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்த நிலையில் எனக்கு வீட்டில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.


 

இதுசம்பந்தமாக நான் சிவகாமசுந்தரியிடம் போன் மூலம் தகவல் சொன்னேன். அவர் என்மீது கோபமாக இருந்தார். அந்த கோபத்தை தணிப்பதற்காக 14ஆம் தேதி இரவு வழக்கமாக சந்திக்கும் கரும்புத் தோட்டத்திற்கு வரச் சொன்னேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, திருமண விஷயத்தை கூறினேன். அதற்கு அவர் என்னை விட்டுவிட்டு வேறு திருமணமா என்று கோபப்பட்டார். அதனால் அவரை தாக்கினேன். அதில் அவர் இறந்து போனார். இறந்துபோனது அறிந்ததும் பயந்துபோய்  தலைமறைவாகி விட்டேன். ஆனால் என்னை போலீசார் எனது செல்போன் செயல்பாடுகள் மூலம் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.