Skip to main content

‘பக்கோடா விற்பது போதாது மோடி ஜி’ – கலாய்க்கும் ஜிக்னேஷ் மேவானி

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

குஜராத் மாநிலம் வட்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து மோடியை நையாண்டியுடன் விமர்சித்து வருகிறார்.
 

modi


காதலர் தினத்தை முன்னிட்டு ஜிக்னேஷ் போட்டிருந்த பதிவில் ‘பல பேருக்கு நாம ஐ லவ் யூ சொல்லுவோம். ஆனா மோடிக்கு யாரு ஐ லவ் யூ சொல்லுவா? இனிய காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இன்று உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையை கோடிட்டு காட்டி மோடியை விமர்சித்துள்ளார் ஜிக்னேஷ் மேவானி. 2047ல் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் இந்தியா வளர்ச்சிப் பாதைக்கு செல்ல, சுய வேலைவாய்ப்பை நம்பாமல், தொடர்ச்சியான சம்பளம் வரக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலக வங்கி.

மேலும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் அதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் உடனடித் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் ஐந்தில் ஒருபங்கு பேர்தான் சம்பளம் தரக்கூடிய வேலைகளில் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதைக்குறிப்பிட்டு மோடியை விமர்சித்துள்ள ஜிக்னேஷ் மேவானி ‘மோடி ஜி… இதனால்தான் பக்கோடா விற்பது மட்டும் போதாது என்கிறோம். எங்கள் பேச்சை கேட்காவிட்டாலும் பரவாயில்லை. உலக வங்கி சொல்வதையாவது கேளுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமருடன் காலை உணவு; வான்கடே நோக்கி பிரம்மாண்ட பேரணி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Breakfast with the Prime Minister; A grand rally towards Wankhede

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று வாகை சூடியுள்ளது. இந்திய திரும்பியுள்ள இந்திய வீரர்கள்  மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்திய நேரப்படி நேற்று சரியாக 1:30 மணிக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் காலை 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். இன்று அவர்கள் தங்கியுள்ள ஐடிசி தனியார் விடுதிக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் ,10:00 மணிக்கு மேலாக விடுதியில் இருந்து புறப்பட்டு பிரதமரை நேரில் சந்திக்க  இருக்கின்றனர். அவருடன் காலை உணவு அருந்திய பின்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வாழ்த்துக்கள் பகிரப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடைபெற இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பொழுது தோனி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் கோப்பை எடுத்துச் சென்று வான்கடே மைதானத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்களோ அதேபோன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மணிக்கு மும்பையில் இருக்கும் மரைன் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பேரணி வான்கடே மைதானம் வரை கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் ஏற்கனவே அறிவித்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

'மக்களின் கவலைகளைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு' - ராகுல் காந்தி கடிதம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'I have the right to express people's concerns' - Rahul Gandhi letter

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'எனது உரையிலிருந்து சில பகுதிகளில் நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் கடமை. எனவே மக்களுடைய கவலைகளை அவையில் தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆகவே எனது உரையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.