Skip to main content

“ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பாக என்.சி.இ.ஆர்.டி செயல்பட்டு வருகிறது” - ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Jairam ramesh Criticized NCERT

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததைப் பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதே போல், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த மதக்கலவரம், உ.பியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும், அதை அனைத்து சமூகத்தால் கொண்டாடப்பட்டது என்றும் கருத்தொற்றுமையைக் கட்டி எழுதியதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் 2024 இல் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான மதிப்பெண்களுக்கு என்.சி.இ.ஆர்.டி மீது தேசிய தேர்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் தன் மீதான மோசமான தோல்விகளில் இருந்து என்.டி.ஏ மடை மாற்றுகிறது. 

இருப்பினும் என்.சி.இ.ஆர்.டி 2014 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் மதச்சார்பின்மையை விமர்சிக்கிறது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் கொள்கைகளை விமர்சித்துள்ளது என்றே சொல்லலாம். என்.சி.இ.ஆர்.டியின் நோக்கம் என்.சி.இ.ஆர்.டியின் நோக்கம் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே தவிர அரசியல் துண்டு பிரசுரங்கள் தயாரிப்பது அல்ல. 

இந்தியக் குடியரசின் அடித்தளத் தூணாக மதச்சார்பின்மை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது என்.சி.இ.ஆர்.டி தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் இன்றியமையாதப் பகுதியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது நாக்பூர் அல்லது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான நரேந்திர கவுன்சில் அல்ல, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் என்பதை என்.சி.இ.ஆர்.டி தனக்குத்தானே நினைவூட்ட வேண்டும். பள்ளியில் என்னை வடிவமைத்த என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களும் இப்போது சந்தேகத்திற்குரிய தரத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஆங்கில வழியில் கல்வி கற்பதால் மாணவர்கள் அறிவை இழக்கின்றனர்” - என்.சி.இ.ஆர்.டி தலைவர்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 NCERT Chairman says Students are losing knowledge due to English medium of education

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில் ஆங்கில வழியில் கல்வி கற்பது தற்கொலைக்குச் சமமான ஒன்று என்.சி.இ.ஆர்.டி தலைவர் டி.பி.சக்லானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பெற்றோர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், போதுமான பயிற்சி இல்லாவிட்டாலும் தங்கள் குழந்தைகளை அத்தகைய பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். இது தற்கொலைக்குச் சமமான ஒன்று ஆகும். அதனால்தான் புதிய  கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை வலியுறுத்துகிறது.

கற்பித்தல் ஏன் தாய்மொழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை நம் சொந்த தாயை, நம் வேர்களை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். இதையெல்லாம் எப்படி புரிந்துகொள்வது? பல மொழிகள் அணுகுமுறை என்பது பல மொழிகளைக் கற்றுக்கொள்ள ஒரு உந்து சக்தி ஆகும். “ஆங்கில வழி கல்வி அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பதில்லை. ஆங்கில வழியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய கலாச்சாரம், மண்ணின் மீதான தொடர்பை இழக்கின்றனர். தாய் மொழியில் கல்வி கற்பது மட்டுமே உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும்.

நாம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறோம். அங்குதான் நமக்கு அறிவு இழப்பு உள்ளது. மொழி அறிவை செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். அதை முடக்கக்கூடாது. இதுவரை நாம் ஊனமுற்றவர்களாக இருந்தோம், இப்போது பன்மொழிக் கல்வி மூலம் நம்மை நாமே செயல்படுத்த முயற்சி செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத் கலவரம் பற்றிய பாடப்பகுதி திருத்தத்தால் சர்ச்சை; என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
NCERT Director Explains Why the Gujarat issue Course Removed?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர், பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. 

அதே போல், கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்தனர்.  அதில் பற்றி எரிந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும்,  கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என்று மொத்தம் 59 பேர் பலியானார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற செய்தி குஜராத் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அப்படி அந்த செய்தி பரவியதும் குஜராத் மாநிலம் முழுவதும் ரத்தக் காடாக மாறத் தொடங்கியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்தக் கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது. 

இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததை பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

அதே வேளையில், என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றி கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம், வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல. நம் மாணவர்களுக்கு அவர்கள் புண்படுத்தும் வகையில் கற்பிக்க வேண்டுமா, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்க வேண்டுமா அல்லது வெறுப்புக்கு ஆளாக வேண்டுமா? அதுதான் கல்வியின் நோக்கமா? 

இப்படிப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கலவரம் பற்றி சொல்லிக் கொடுப்போமா? அவர்கள் வளர்ந்ததும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், ஆனால் ஏன் பள்ளி பாடப்புத்தகங்கள். அவர்கள் வளரும்போது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்? ராமர் கோவில், பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால், அதை நமது பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாதா, அதில் என்ன பிரச்சனை? புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கினால், பழங்கால வளர்ச்சிகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்ப்பது நமது கடமையாகும்” என்று கூறினார்.