Published on 16/11/2018 | Edited on 16/11/2018
இன்டெல் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ரூ. 1,100 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிகபட்ச முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
![ii](http://image.nakkheeran.in/cdn/farfuture/psxJmuxusAINV0dY4xqTyHpXcN7e2Gottdzqpv236Mw/1542378926/sites/default/files/inline-images/int-in.jpg)
44 ஏக்கரில், 6,20,000 சதுர அடியில் இந்த மையம் அமைக்க இருப்பதாகவும், அதில் 1,00,000 சதுர அடிக்கு உலகத்தரத்திலான ஆய்வுக கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.