o.p ravath

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்கள், இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகளை அறிவித்தது.

இந்நிலையில், பருவமழை காரணமாக தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதனால் திருப்பறங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஓ.பி. ராவத்.

Advertisment

கர்நாடகா மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களான பெல்லாரி, மாண்டியா, ஷிமோகா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். தேர்தல் விதிகளை மீறுவோரின் மீது பொது மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.