மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று (22.11.2019) முன்தினம் தொடங்கியது. பகல்- இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.
வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106, இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்பிகுர் 74, மெஹ்முதுல்லா 39, அல் அமீன் 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அதேபோல் டெஸ்டில்தொடர்ச்சியாக 7 போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.
இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.