Skip to main content

சோனியாவின் மருமகனுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
priyanka robert

 

ராபர்ட் வதேராவுக்கு இந்திய வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர். அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு  நாற்பத்தி இரண்டு கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. 

 

 


வருமான வரித்துறையை எதிர்த்து போடப்பட்ட இவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து வருமான வரிதுறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்னும் இவருடைய நிறுவனம் வருமானவரிதுறையினருக்கு முறையாக கணக்கு காட்டவில்லையென்றும் வருமான வரி கட்டவில்லை என்றும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்பது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்