Skip to main content

ஒருதலை காதலால் பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
incident in kerala...police investigation

 

கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண்களின் தொடா் தற்கொலை மரணம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இளம்பெண் மருத்துவரை ஒருதலை காதலால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதே துப்பாக்கியால் அந்த வாலிபரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கண்ணூா் நாரகத்து பகுதியை சோ்ந்த போலீஸ் டிராபிக் மாதவன் மற்றும் ஆசிாியையான சபினா தம்பதியின் மகள் மானஸா (24). இவர் கொச்சி கோதமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படித்து விட்டு அங்கு தற்போது பயிற்சி மருத்துவராக பணிபுாிந்து வந்தார்.

 

இந்தநிலையில் கண்ணூர் தலச்சோியை சேர்ந்த விற்பனைக்காக செம்மீன்கள் வளர்த்து வரும் ரகுத்தமன் மற்றும் ரஜிதா தம்பதியினரின் மகன் ராகில்(32) எம்.பி.ஏ படிப்பு முடித்து விட்டு பிளைவுட் தொழில் செய்து வருகிறார். மானஸாவும் ராஹிலும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டதையடுத்து ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவா்களின் பழக்கம் நண்பர்களாக தினமும் நீடித்தது. இந்தநிலையில் ராஹிலின் பழக்கம் வழக்கத்தில் வித்தியாசம் ஏற்பட்டு அது மானஸாவுக்கு பிடிக்காமல் போக உடனே ராஹிலின் தொடர்பை துண்டித்தார் மானஸா.

 

இதனால் ஆத்திரமடைந்த ராஹில் அவரை தினமும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் வழியாக என்னை காதலி என்னை திருமணம் செய்துகொள் என தொந்தரவு செய்து வந்தான். இதனால் மானஸா கண்ணூா் சிற்றி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ராஹிலை எச்சரித்து அனுப்பினார்கள். இது ராஹிலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மானஸா கோதமங்கலத்தில் தங்கியிருந்த விடுதியின் அருகில் உள்ள இன்னொரு விடுதியில் ராஹில் அறையில் எடுத்து  தங்கியிருத்து மானஸாவை நோட்டமிட்டான்.

 

இந்தநிலையில்  30-ம் தேதி மானஸா மதியம் தனது தோழிகளுடன் அறையில் சாப்பிட்டு கொண்டியிருந்த போது திடீரென்று அங்கு நுழைந்த ராஹில் தன்னுடன் பேசவா என மானஸாவை அழைத்துள்ளான் .அதற்கு கோபபட்ட மானஸா வெளியே போ என விரட்டியுள்ளார். இருந்தாலும் உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் நீ வா என அடுத்து இருந்த அறைக்குள் அழைத்தான். அதை நம்பி உள்ளே சென்ற மானஸாவை பதுக்கி வைத்தியிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான் ராஹில். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மானஸா துடிதுடித்து இறந்தார். அதைத்தொடர்ந்து  தன்னை தானே தனது நெற்றில் வைத்து சுட்டான் ராஹில். இதில் குண்டு துளைத்து பாிதாபமாக அவனும் இறந்தான்.

 

இது குறித்து கோதமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பரின் உடலையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருவதோடு ராஹிலுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.