Skip to main content

சர்ச்சை முகநூல் பதிவால் நள்ளிரவில் கலவரம்... எம்.எல்.ஏ. வீட்டிற்கு தீ!! துப்பாக்கிசூடு!!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
karnataka

 

 

கர்நாடகவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் பதிவிட்ட சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால், அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு வரை சென்று இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம், புலிகேஷி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட மதத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த சமூக வலைதள பதிவுக்கு எதிராக கூடிய ஒரு கும்பல் எம்.எல்.ஏ.வின் வீட்டை தாக்கியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தது. சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். டி.ஜே. ஹள்ளி, கே.ஜே.ஹள்ளி எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

 

அதேபோல் போலீஸ் காவல் ஆணையர் உட்பட 60 பேர் இந்த கலவர சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் மற்றும் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் நள்ளிரவில் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த கலவரத்தில் ஈடுபட்ட  110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்