Skip to main content

மதுபான கடையில் தகராறு; துப்பாக்கியால் ஊழியர் சுட்டுக் கொலை!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
incident happened at employee for Argument at liquor store

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (26-05-24) நள்ளிரவு 1 மணியளவில், அடையாளம் தெரியாத ஒருவர், மதுபான கடைக்குள் வந்து அங்கிருந்த  ஊழியரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த ஊழியர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து, அங்கிருந்த மற்றவர்கள் படுகாயமடைந்த ஊழியரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மதுபான கடையில் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், துப்பாக்கி வைத்திருக்கும் அடையாளம் தெரியாத நபர், மேலாடையின்று கால் சட்டை மட்டும் அணிந்து, டி-ஷர்ட் ஒன்றால் முகத்தை மூடியபடி, துப்பாக்கியை காட்டியபடியே கடைக்குள் வந்தார். அப்போது அவர், அங்கு செய்வதறியாத நின்ற ஊழியரின் நெஞ்சுக்கு நேராக தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து செல்வது காணப்படுகிறது. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், மதுபான கடை மூடப்பட்ட பிறகு 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கடைக்குள் வந்து மதுபானம் கேட்டு ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு ஊழியர்கள், கடை மூடப்பட்ட பிறகு மதுபானம் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதில், இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அதன் பின், அந்த 5 பேரும் வெளியே சென்றுவிட்டனர். இதனையடுத்து, அவர்களில் ஒருவர் மீண்டும் கடைக்கு வந்து துப்பாக்கியால் ஊழியரை சுட்டு கொலை செய்து தப்பியோடிவிட்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; டவர் மேல் ஏறிய வேட்பாளரால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rejection of nomination in by-election; A sensation by the candidate who climbed to the top of the tower

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக நடத்துநர் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா,திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நாகர்ஜுனா!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Nagarjuna met the fan in person and expressed regret

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம்  ‘குபேரா’. இப்படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து தொட்டு பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்தார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டார். 

இந்த நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை விமான நிலையத்தில் நாகர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அந்த ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, ‘உங்கள் மீது எந்த தப்பும் இல்லை’ எனக் கூறி அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.