Skip to main content

காதலியைக் கொன்று சடலத்துடன் சாலையில் அமர்ந்த காதலன்; பெங்களூரில் பரபரப்பு

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

incident in Bangalore; police shock

 

காதலியைக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் சாலையில் காதலன் அமர்ந்திருந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் தினகரன் பனாலா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நளமதி என்ற பெண்ணும் தினகரன் பனாலாவும் காதலித்து வந்துள்ளனர். லீலாவும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  

 

லீலாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினகரன் பனாலா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதல் வேண்டாம் என அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லீலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். முதலில் திருமணம் வேண்டாம் என மறுத்த லீலா பெற்றோரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இதை காதலன் தினகரனிடம் சொல்ல, தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறாயா என எச்சரித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனாலாவை சந்திப்பதையும் லீலா தவிர்த்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், சம்பவத்தன்று லீலா பணியாற்றும் அலுவலகத்திற்குச் சென்ற தினகரன், திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துள்ளார். ஆனால் லீலா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக லீலாவை குத்திக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த லீலாவின் உடலுக்கு அருகிலேயே தினகரன் அமர்ந்திருந்தார். சாலையில் வெட்டவெளியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கும் சடலத்துடன் இளைஞர் அமர்ந்திருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் லீலாவின் உடலில் 16 முறை கத்திக்குத்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.