Skip to main content

“பாஜக வேட்பாளரிடம் இருந்து உயிர் தப்ப 15 கிமீ ஓடினேன்..”- காங்கிரஸ் எம்.எல்.ஏ வேட்பாளர் பரபரப்பு வாக்குமூலம்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

“I ran 15 km to escape from BJP; They would have committed tragedy”- the sensational confession of the MLA candidate

 

குஜராத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 93 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். அகமதாபாத், காந்திநகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

குஜராத் பனஸ்கந்தாவில் உள்ள தாண்டா தொகுதியில் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த காந்தி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் லது பார்கி என்பவர் போட்டியிடுகிறார். 

 

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லது பார்கி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், “நேற்று இரவு 9.30 மணியளவில் லது பார்கி மற்றும் அவரது ஆட்கள் தாக்கினார்கள். கொலையும் செய்திருப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நான் காட்டுக்குள் ஒளிந்திருந்தேன். காட்டுக்குள்ளேயே சுமார் 2 மணி நேரம் ஓடினேன். சுமார் நான்கு மணி நேரம் கழித்து காவல்துறையினர் என்னை கண்டுபிடித்தனர். காரை தடுத்து நகரமுடியாமல் செய்து விட்டதால் சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் ஓடிக் கொண்டே இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

 

நேற்று இரவு காந்தி காணாமல் போனதாக முன்னாள் காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், “காங்கிரஸின் தாண்டா சட்டமன்ற வேட்பாளரான காந்தியை காணவில்லை. தேர்தல் கமிஷனிடம் காந்திக்கு கூடுதலாக பாதுகாப்பு கேட்டும் கமிஷன் அதை தாமதப்படுத்தியது. பாஜகவினர் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். இதற்காகவெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். கடுமையாக போராடுவோம்” என பதிவிட்டிருந்தார்.

 

சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவரே தான் துரத்தப்பட்டதாக புகார் அளித்திருப்பது குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.