
ஹைதராபாத்தில் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஓவைசி கட்சியின் எம்.எல்.ஏ. மகனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேளிக்கை விடுதிக்கு சென்ற சிறுமியை ஐந்து சிறுவர்கள் உள்பட ஆறு பேர் கடத்திச் சென்று காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் ஆறு பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில், கைதான சிறுவர்களில் இருவர் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த பிரபலங்களின் மகன்கள் ஆவர். மற்றொருவர் ஓவைசி கட்சியின் எம்.எல்.ஏ. வின் மகன் ஆவர்.
இதனிடையே, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், சொகுசு விடுதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.