Skip to main content

லாங் ட்ரைவ் அழைத்துச் சென்று பிரபல நடிகை சுட்டுக்கொலை; இரண்டு வயது குழந்தையால் சிக்கிய கணவர்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

லாங் டிரைவ் போகலாம் என மனைவியை அழைத்துச் சென்ற கணவன் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசில் நாடகமாடி, பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகையான ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார் யூடியூப் பிரபலமாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிரகாஷ் குமார் ஹவுரா போலீஸாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், “தனது மனைவி ரியா குமாரி மற்றும் தனது குழந்தையுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். தடுக்க முற்பட்டபோது தன்னுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். அதன் பிறகு குண்டடிபட்ட தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.” என்று போலீசாரிடம் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரகாஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தனது இரண்டரை வயது மகளை தோளில் போட்டுக் கொண்டு பரிதாபமாக பிரகாஷ் குமார் மீண்டும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். ஆனால், அவரை சந்தேகித்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர்களது 2 1/2 வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரகாஷ் குமார் தெரிவித்த தகவல்கள் போலியானது என்பதை உறுதிசெய்த போலீசார், மீண்டும் பிரகாஷ் குமாரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது தன்னைவிட அழகாக இருப்பதாலும் அதிகம் பணம் சம்பாதிப்பதாலும் தன்னுடைய மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், இதனால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரை சுட்டுக்கொல்ல முடிவு செய்தேன். இதன் காரணமாக லாங் டிரைவ் போகலாம் என அழைத்துக் கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தேன் என்றும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பிரகாஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.