Skip to main content

லாங் ட்ரைவ் அழைத்துச் சென்று பிரபல நடிகை சுட்டுக்கொலை; இரண்டு வயது குழந்தையால் சிக்கிய கணவர்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

லாங் டிரைவ் போகலாம் என மனைவியை அழைத்துச் சென்ற கணவன் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசில் நாடகமாடி, பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகையான ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார் யூடியூப் பிரபலமாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிரகாஷ் குமார் ஹவுரா போலீஸாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், “தனது மனைவி ரியா குமாரி மற்றும் தனது குழந்தையுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். தடுக்க முற்பட்டபோது தன்னுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். அதன் பிறகு குண்டடிபட்ட தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.” என்று போலீசாரிடம் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

 

Husband Who Takes Long Drive and Shoots Famous Actress

 

உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரகாஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தனது இரண்டரை வயது மகளை தோளில் போட்டுக் கொண்டு பரிதாபமாக பிரகாஷ் குமார் மீண்டும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். ஆனால், அவரை சந்தேகித்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர்களது 2 1/2 வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரகாஷ் குமார் தெரிவித்த தகவல்கள் போலியானது என்பதை உறுதிசெய்த போலீசார், மீண்டும் பிரகாஷ் குமாரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது தன்னைவிட அழகாக இருப்பதாலும் அதிகம் பணம் சம்பாதிப்பதாலும் தன்னுடைய மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், இதனால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரை சுட்டுக்கொல்ல முடிவு செய்தேன். இதன் காரணமாக லாங் டிரைவ் போகலாம் என அழைத்துக் கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தேன் என்றும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பிரகாஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.