Skip to main content

'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

'How was actor Sanjay Dutt released earlier?' - Court order in Perarivalan case!

 

'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' என்பது குறித்து பதிலளிக்க மஹாராஷ்டிரா தகவல் ஆணையத்திற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றச்சாட்டு எழுந்து அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 2013-ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. அதேபோல் அவருக்குப் பலமுறை பரோலும் வழங்கப்பட்டிருந்தது. இறுதியில் சிறைவாசம் முடிவதற்கு முன்பாகவே (256 நாட்களுக்கு முன்பாகவே ) அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சலுகைகள் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்து வரும் பேரறிவாளன் மும்பை எரவாடா சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, அந்தச் சிறை நிர்வாகம் தகவலைத் தர மறுத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கான தகவல்கள், எந்த முறையைப் பின்பற்றி அவர் முன்னதாக விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் தனது விடுதலைக்கும் பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் அவர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

 

'How was actor Sanjay Dutt released earlier?' - Court order in Perarivalan case!

 

இந்த வழக்கின் விசாரணையில் நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி என மகாராஷ்டிரா தகவல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்துறை அமைச்சகத்திற்கும், குடியரசு தலைவருக்கும் ஆளுநர் அனுப்பிவைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்பது தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள, பேரறிவாளன் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.