Published on 16/09/2022 | Edited on 16/09/2022

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத் திட்டத்திற்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 1 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, அவருக்கு ரங்கநாயபுரம் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர். பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்திற்காக முகேஷ் அம்பானி 1 கோடியே 11 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.