Skip to main content

இலவச கரோனா தடுப்பூசிகளால் பெட்ரோல் விலை உயர்வு - மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

mos petroleum

 

இந்தியாவில்  பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுதொடர்பாக கூறியதாவது; பெட்ரோல் ஒன்றும் விலை உயர்வானது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கரோனா தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுகிறீர்கள். கரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது.

 

நமது அரசு 130 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 1,200 ரூபாய். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 40 ரூபாய்தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நாட்டில் குறைந்தபட்ச மதிப்பு கூட்டப்பட்ட வரி விதித்துள்ள ஒரே மாநிலம் அசாம் தான். பெட்ரோல் மீது அந்த மாநிலமானது 28 ரூபாயை மதிப்பு கூட்டு வரியாக விதித்துள்ளது. எங்கள் அமைச்சகம் (மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை) 30 ரூபாயை வரியாக விதித்துள்ளது.

 

நீங்கள் இமயமலை நீரைக் குடிக்க விரும்பினால், ஒரு பாட்டிலுக்கு ரூ .100 ஐ செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே உயரும். எங்கள் அமைச்சகம் எண்ணெய் பொருட்களின் விலையை நிர்ணயிக்கவில்லை. வர்த்தக துறை அதை நிர்ணயிக்கிறது. நிர்ணயிக்கப்படும் விலை சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது. அண்மையில் எங்களது அமைச்சகத்தின் நிதி கரோனா சூழ்நிலையை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குத்  திருப்பிவிடப்பட்டது. 

இவ்வாறு ராமேஸ்வர் தெலி தெரிவித்தார். 

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் மாநில பாஜக தலைவர், ஒரு மோட்டர் சைக்கிளில் மூன்று பேர் செல்ல வேண்டும் எனவும், மக்கள் நடக்க பழக வேண்டும் எனவும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்