இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகஎம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங்செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண்சிங்மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைவினேஷ்போகட்குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்துஇந்திய மல்யுத்தசம்மேளனத்தைகலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜகஎம்.பிபிரிஜ்பூஷன் சரண்சிங்பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறிபஜ்ரங்புனியாஉள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லிஜந்தர்மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3நாட்களாகபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம்வாபஸ் பெறப்பட்டது.
மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்றுபிரிஜ்பூஷண்சரண்சிங்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினைவிசாரிக்ககுத்துச்சண்டை வீராங்கனைமேரிகோம்தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில்பிரிஜ்பூஷண்சரண்சிங்மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லிஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம்தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும்போராட்டத்தைதொடங்கி உள்ளனர்.
இந்தப் போராட்டம் தற்போது8வதுநாளை எட்டியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றநீரஜ்சோப்ரா மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதி வேண்டிதடகளவீரர், வீராங்கனைகள் வீதிகளில்இறங்கிப்போராடுவதைப்பார்க்க வேதனையாக இருக்கிறது. கடுமையாக உழைத்து இந்தியாவைபெருமைப்படுத்தும்வீரர், வீராங்கனைகள் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களது கண்ணியத்தைக்காப்பது நமது நாட்டின் கடமை. இதுபோல் இனி எப்போதும் நடக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.