Published on 22/09/2022 | Edited on 22/09/2022

சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவை இந்தியாவைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாவது பணக்காரருமான கவுதம் அதானி சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது.
சிவசேனா கட்சியின் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் இயங்கி வருகிறது. மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் கவுதம் அதானி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, டெல்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.