Former Congress Chief Minister joined BJP in maharashtra

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியா கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய லோக் தளம் என ஒவ்வொன்றாக பா.ஜ.க கூட்டணியில் இணைந்து வருகிறது. இதனையடுத்து, பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே பிரிந்து சென்ற பஞ்சாபில் உள்ள பிரபலமான கட்சி தற்போது மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று (12-02-24) அறிவித்தார். மேலும், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

Advertisment

இந்த நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்குச்சென்ற முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.க.வில் இணைந்தார். அசோக் சவான் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.