Skip to main content

டாடா மோட்டார்ஸுக்கு கைமாறும் ஃபோர்டு ஆலை! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Ford plant to transfer to Tata Motors!

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. 

 

குஜராத் மாநிலம், சனந்த் நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டது. இதனையடுத்து, டாடா நிறுவனம், பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஆலையை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் ஏற்கப்பட்டது. 

 

ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், டாடா மோட்டார்ஸ் முன்வந்துள்ளது.  

 

ஏற்கனவே, சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு ஆலையின் கார் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்கள் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னை ஆலையில் உற்பத்தியை முற்றிலுமாக ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு” - டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Investment of Rs.9 thousand crores TN Govt Agreement with Tata Company

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி. செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

காருக்கு கண்கலங்கிய படி விடைக் கொடுத்த ஊழியர்கள்! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Employees who responded to the car in a blink of an eye!

 

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடைசி காருக்கு கண்கலங்கியவாறு ஊழியர்கள் விடைக்கொடுத்தனர். 

 

சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக ஃபோர்டு தொழிற்சாலை இயங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறி ஃபோர்டு தொழிற்சாலை வரும் ஜூலை மாதம் 31- ஆம் தேதி அன்றுடன் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி முடிவடைந்தது. 

 

கடைசியாக, இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஃபோர்டு காரை அலங்கரித்து கண்ணீர் மல்க ஊழியர்கள் விடை கொடுத்தனர்.