Skip to main content

மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்; மீட்புப்பணிகள் தீவிரம்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Floating Northeast States; Intensive rescue work

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26 ஆம் தேதி (26.05.2024) நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவி பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தற்காலிக சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ரிமால் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சூழ்நிலையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் விரிவான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

Floating Northeast States; Intensive rescue work

இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ராணுவ அதிகாரி அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று (30.05.2024) வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்ட நபர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்ய ஏராளமான வீடுகளுக்குச் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Airport roof collapse incident

டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள்,  ரயில் நிலையம்,  மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன.  இத்தகைய சூழலில் தான் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவலை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் அதுல் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விமான  பயணி ஒருவர் கூறுகையில், " நான் பயணிக்க உள்ள விமானம் காலை 9 மணிக்கு  புறப்பட  உள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததை அறிந்தேன். இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து யாஷ் என்ற பயணி கூறுகையில், "பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு  காலை 08 : 15 மணிக்கு விமானத்தில் வந்தேன். இங்கு காலை 05 : 00  - 05 : 15 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது எனக் கேள்விப்பட்டேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

கனமழை; பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
heavy rain; Holiday announcement for schools and colleges

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அன்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும்  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.