External Affairs Minister Jaishankar

கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்துக் கேள்வியெழுப்பியுள்ள ராகுல் காந்தி, "இந்திய ராணுவ வீரர்கள் லடாக் எல்லைக்குச் செல்லும்போது ஏன் ஆயுதங்கள் இன்றி அனுப்பப்பட்டார்கள்? நிராயுதபாணியாகச் சென்ற இந்திய ராணுவ வீரர்களைக் கொல்வதற்குச் சீன ராணுவத்துக்கு எவ்வாறு துணிச்சல் வந்தது? இதற்கு யார் பொறுப்பு? இந்திய வீரர்களைக் கொன்றதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறிழைத்து விட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

External Affairs Minister Jaishankar

இந்நிலையில் லடாக் எல்லையில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்ட பொழுது இந்தியர்களிடம் ஆயுதங்கள் இருந்தனஎன தகவல் வந்துள்ளது.இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் வழங்காமல் ஏன் அனுப்பினீர்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.ராகுல் காந்தி கேள்வி எழுப்பி நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில்,

Advertisment

1996 மற்றும் 2005 போடப்பட்ட ஒப்பந்தங்களின் படிதுப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த வில்லை ஆனால்இந்திய வீர்கள் கையில் துப்பாக்கி இருந்தது எனக்கூறியுள்ளார். மேலும்லடாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.