Skip to main content

மம்தா பானர்ஜி மருமகனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Enforcement Directorate Interrogates Mamata Banerjee's Nephew For 9 Hours

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஒரு விரிவான வலையமைப்பு தரகர்களைக் கொண்டு ஏஜெண்டுகள் வைத்து செயல்பட்டு, பணம் பெற்றுக் கொண்டு அரசுப் பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் வேலைகளை வழங்கியதாக விமர்சனம் எழுந்தது. இப்படி மேற்கு வங்கத்தில் மோசடி நடந்ததாகச் சொல்லப்படும் விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை, "அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அவரிடம் சில கேள்விகளைக் கேட்க இருக்கிறோம்." எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் நேற்று (14-09-2023) ஆஜரானார்.

 

பின்னர், ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையினர் கேள்விகளுக்குப் பதிலளித்த பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அபிஷேக், "அரசியல் ரீதியாகப் போராட முடியாதவர்கள் ஏஜென்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். அமலாக்கத்துறையினர் என்னை செப்டம்பர் 12 அல்லது 15ல் அழைத்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணிகளின் கூட்டம் நடந்த நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இதை வைத்து, எதிர்க்கட்சியில் பங்கு வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக குறிவைப்பது நிரூபணமாகியுள்ளது" என பாஜகவை காட்டமாக விமர்சித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

சபாநாயகர் அப்பாவு சொன்ன குற்றச்சாட்டுக்கு இ.பி.எஸ். பதில்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

EPS's response to Speaker Appa's allegations

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்களைக் கொண்டு பேசுகிறார்கள்” எனவும், தனக்கு மூன்று முறை ஒருவர் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் தெரிவித்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால்தான் நாம் பேச முடியும். சபாநாயகர் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஜனநாயகப்படியும், அவையின் மரபையும் கடைப்பிடிக்கிறாரா? எனவே அவர் சொல்லி இருப்பது சரியா தவறா என நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். சட்டப்பேரவை தலைவர் என்பவர் பொதுவானவர். ஆனால், அவர் ஒரு கட்சிக்காரர் போல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.