Skip to main content

12 வயதுக்கும் மேற்பட்டோருக்கான புதிய கரோனா தடுப்பூசி - சில நாட்களில் அனுமதியளிக்கவுள்ள இந்தியா!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

zydus cadila

 

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் v, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனம், தான் உருவாகியுள்ள ‘ஸைகோவி-டி’ என்ற தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்திருந்தது.

 

இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்க மேலும் சில நாட்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸைகோவி-டி தடுப்பூசியைக் கொண்டு மூன்றுகட்ட சோதனைகளை நடத்தி முடித்துள்ள ஸைடஸ் காடிலா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்குப் பாதுகாப்பானது என ஏற்கனவே கூறியுள்ளது. மேலும் மூன்றாவது கட்ட ஆய்வின் இடைக்கால தரவுகளின்படி, தங்கள் தடுப்பூசிக்கு 66.6% சதவீத செயல்திறன் இருப்பதாகவும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி-டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டதாகும். முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு விநியோகம் தொடங்கியது!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

zydus cadila

 

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்தாண்டு இறுதியில் இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில் ஸைடஸ் காடிலா நிறுவனம்,‘ஸைகோவி - டி' தடுப்பூசியை மத்திய அரசுக்கு விநியோகிக்க தொடங்கியுள்ளது. மேலும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தனது தடுப்பூசியை தனியார் சந்தையில் (தனியார் மருத்துவமனைகளுக்கு) விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

 

‘ஸைகோவி - டி' தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மொத்தம் மூன்று டோஸ்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு செலுத்தலாம் என்பதும், ‘ஸைகோவி - டி' தடுப்பூசி உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.