/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fwdqw_0.jpg)
ஜம்மு-கஷ்மீரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். உணரப்பட்ட நிலநடுக்கமானது 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கஜிகிஸ்தான்எல்லையை மையமாகக் கொண்ட இடத்தில் இன்று காலை சுமார் 9.45 மணி அளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதனால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள்எந்த தகவலும் வெளியாகவில்லை.இருப்பினும் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநரிடம்பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பையும், நிலவரத்தையும் கேட்டறிந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)