Skip to main content

பிரிஜ்பூஷண் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

delhi police enquiry brij bhushan uttar pradesh home

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி  பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார்.

 

இதையடுத்து மல்யுத்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகின. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டவா மாவட்டத்தில் உள்ள பிரிஜ்பூஷண் சரண் சிங்கின் வீட்டில் உள்ள பணியாளர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த 12 பணியாளர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது அங்கு பிரிஜ்பூஷண் சரண் சிங்  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வாரிசு குறித்து அறிவித்த மாயாவதி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mayawati announces political succession

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று (10.12.2023) லக்னோவில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாயாவதி தனது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.

மாயவதியின் சசோதரர் ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் (வயது 28) ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர் ஆவார். மாயாவதியின் அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டாலும், தற்போதைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதியே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் ஆகாஷ் ஆனந்த் மாயாவதிக்கு பின்னர் அக்கட்சியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியதும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானாவிலும் பகுஜன் சமாஜ் கட்சி பணிகளுக்கு பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஜய் பட வில்லன் நடத்திய துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு

 

TV actor Bhupinder Singh arrested

 

இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் பூபிந்தர் சிங். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வாழ்ந்து வரும் இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பிரச்சனை வந்துள்ளது. அப்போது, பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்களும் உரிமம் பெற்ற ரிவால்வர் மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை சுட்டுள்ளனர். 

 

அதில் குர்தீப் சிங் மகன் கோவிந்த் (23) இறந்துள்ளார். மேலும் குர்தீப் சிங், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்த டிஐஜி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தகவல்களை பெற்று பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார்.  இதன் பேரில் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர்.