Skip to main content

‘டெல்லி மக்களுக்கு உதவ வேண்டும்’ - உ.பி, ஹரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் கடிதம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Delhi Minister's Letter to Chief Ministers of UP, Haryana  for Water scarcity

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்து கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அந்த வகையில், தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மேலும், டெல்லி குடிநீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை நியமித்து, குழாய்கள் மூலம் வாகனங்களைக் கழுவுவினாலும் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘டெல்லியில் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சமயத்தில் டெல்லி மக்களுக்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநில அரசு கைகொடுக்க வேண்டும். மேலும், பருவமழை வரும் வரை ஒரு மாத காலத்திற்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Advani admitted to hospital again

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும்  சிறுநீரக பாதிப்புகளால்  அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே. அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கையில், “பாஜக மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இரவு 9 மணியளவில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்து வருகிறார்கள். 

Next Story

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்குச் சிறை!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Jail for Narmada Bachao Andolan activist Medha Patkar

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தவரும், தற்போதைய டெல்லியின் துணைநிலை ஆளுநராக உள்ள வினய் குமார் சக்சேனா சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேதா பட்கருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி கே சக்சேனாவுக்கு 10 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து வி.கே.சக்சேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழப்பீடு எதுவும் தேவையில்லை. அந்த நிதியை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் (டி.எல்.எஸ்.ஏ.) கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேதா பட்கருக்கு அனுமதி அளிக்கும் வகையில் டெல்லி சாகேத் நீதிமன்றம் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கர் கருத்து தெரிவிக்கையில், “உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. யாரையும் அவதூறு செய்ய முயற்சிக்கவில்லை. எங்கள் வேலையை மட்டுமே செய்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவால் செய்வோம்”எனத் தெரிவித்துள்ளார்.