Skip to main content

மோசம் செய்த தாஸ்; 22 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த பூனம் - கிழக்கு டெல்லியை கதிகலங்க வைத்த கொலை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Das who did evil; Poonam, cut into 22 pieces and placed on a fridge

 

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் வைத்து பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பெண் ஒருவர் தனது கணவனை மகன் உதவியுடன் 22 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் கிழக்கு டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

 

கிழக்கு டெல்லி பாண்டவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஞ்சன்தாஸ்-பூனம் தம்பதி. இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருந்த நிலையில் அஞ்சன்தாஸுக்கு பல பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி பூனம் அஞ்சன்தாஸை இதுதொடர்பாக பலமுறை கண்டித்துள்ளார்.

 

ஆனாலும் அஞ்சன்தாஸ் முறையற்ற தொடர்பைக் கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூனம் மகன் உதவியுடன் கடந்த ஜூன் மாதம் கணவருக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் கணவனின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகனின் உதவியுடன் அவற்றை சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். அவ்வப்போது உடல் துண்டுகளை டெல்லி கிழக்குப் பகுதியில் வீசியுள்ளார்.

 

அதே பகுதியில் நிகழ்ந்த வேறொரு கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மனித உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிக்கிய பூனத்திடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.