Skip to main content

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

 Cylinder price hike for commercial use ...!

 

தொடர்ச்சியாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

 

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஒன்றுக்கு 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 19 கிலோ எடைகொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 2,253 ரூபாயிலிருந்து 2,355 ரூபையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? - கனிமொழி எம்.பி.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kanimozhi said central government has reduced price of cylinders because of elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தேர்தல் வருவதால் தான் மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, சிலிண்டர் விலையை முன்கூட்டியே குறைத்திருக்க முடியும்; ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும் தான் கவலையா? பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை செய்யலாம். அதைவிட்டு விட்டு பெண்களை சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.