Skip to main content

குறையாத நோய்த் தொற்று ஒருபுறம்... அதிகரிக்கும் உயிரிழப்பு மறுபுறம் - தவிக்கும் தலைநகரம்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

hj

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த டெல்லியில் தற்போது கரோனா வெகுவாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 4,95,598 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,818 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 99 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 4,95,598 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்