புதுச்சேரி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு உரிமை இல்லை என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கின் மேல் முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கிரண்பேடிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு உரிமை இல்லை என தனி நீதிபதி மஹாதேவன் ஏப்.30 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்திருந்தது.
இந்த வழக்கில் வாதங்களின் இறுதியில் தனி நீதிபதியின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.