Skip to main content

கரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 


கரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம் சூரத் நகரில் 69 வயது முதியவர் உயிரிழந்தார். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

CORONAVIRUS INDIA PEOPLES GUJARAT GOVERNMENT

அதேபோல் வதோதரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ரத்த மாதிரி மருத்துவ பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் உடல் நிலை பாதித்த பெண் உயிரிழந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

இந்தியாவில் இன்று (22/03/2020) ஒரே நாளில் மட்டும் மஹாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 370 ஆக உயர்ந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்