Skip to main content

கரோனா பாதிப்பு - இந்தியாவில் பத்தாயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

sc


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 81 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 9000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு பாதிப்பு உயர்ந்து வருகின்றது. உலக அளவில் கரோனா தொற்றில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் குறைவான இறப்பு விகிதம் இருந்துவந்த நிலையில் தற்போது அதன் வேகமும் அதிகரித்துள்ளது. தற்போது வரை 9,915 பேர் இந்தத் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். விரைவில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


 

 

சார்ந்த செய்திகள்