Skip to main content

தமிழகத்தை விட கர்நாடகாவில் வேகமாகப் பரவும் கரோனா!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

ரகத

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்த கர்நாடகாவில் தற்போது கரோனா அதிவேகத்தில் பரவி வருகிறது. இன்று மட்டும் 6,473 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,88,611 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக 86 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்