Skip to main content

புதுச்சேரியில் கரோனா 1,000-ஐ கடந்தது! மல்லாடி ஆலோசனை! கிரண்பேடி எச்சரிக்கை!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Corona crosses 1,000 in Puducherry Malladi's advice!

 

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் புதுச்சேரியில் 62 நபர்களும், காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒருவர் என மூன்று நபர்கள் என மொத்தம் 65 பேருக்கு கரோனா தோற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Corona crosses 1,000 in Puducherry Malladi's advice!

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "மத்திய அரசு ஊரடங்கு தளர்வு அளித்தாலும்கூட, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது நல்லது. ஊரடங்கு அமல்படுத்தினால் வருவாய் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாது. பொதுமக்களுக்கான நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தளர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் வாரத்தில் ஒருநாள் என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கரோனா பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் பேசி முடிவு செய்யப்படும்.

ஏனாமில் தொற்று ஏற்பட்டு உள்ள 13 பேரில் 11 பேர் அங்குள்ள இறால் பண்ணையில் வேலை செய்தவர்கள். ஏனாம் பிராந்தியம் தூய்மை பணியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஜூலை 1ஆம் தேதி முதல் அங்கு பணிகள் நடைபெறவில்லை. ஊதியத்தை கவர்னர் நிறுத்தியதால் பணியாளர்கள் பணிகளை நிறுத்தியுள்ளனர். ஏதேனும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பு ஆளுநரையே சாரும். கரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் யாருக்கும் ஊதிய பிரச்சனை வரக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. ஏனாமில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு அரசும், கவர்னரும்தான் முழு பொறுப்பு" என்று கூறினார்.

 

Corona crosses 1,000 in Puducherry Malladi's advice!

 

இதனிடையே சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கிரன்பேடி, “புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து அரசு அதிகாரிகள், தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ந்ததில் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் தங்களது இல்லங்களிலிருந்து வெளியே வருகின்றனர். அவர்களால் மற்றவர்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் நோய் தொற்று பரவுகிறது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து அரசு உத்தரவுகளை மீறி வெளியே வருபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். எனவே அவர்கள் பொறுப்புணர்ந்து வீடுகளிலேயே இருக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது, இது பாதிப்பை ஏற்படுத்தும். உள்ளாட்சித்துறை,  நகராட்சிகளில் இதை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது செயல்பாட்டை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.