Skip to main content

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Consideration to study whether Taj Mahal was built by Shahjahan or not

 

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்ரா பெயர் மாற்றம்; தாஜ்மஹாலில் தொல்லியல் துறை?

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Agra name change?; Department of Archeology at Taj Mahal

 

முகலாய மன்னர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கு, கடந்த 3 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம், இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு நகரத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அங்குள்ள பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முகல் சாராய் என்ற இடத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாயா நகர் என்று மாற்றப்பட்டது. அதே போல், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தி என்றும் மாற்றப்பட்டுள்ளது. 

 

அந்த வரிசையில், அலிகார் என்ற இடத்தின் பெயரை இனிமேல் ஹரிகார் என்று மாற்றப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அலிகார் நகர மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையிலான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்ராவை அக்ராவன் அல்லது அகர்வால் என்று மாற்றவும், முசாபர் நகர் என்ற இடத்தின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்றவும் உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

 

 

Next Story

திருவாரூரில் தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

The son who built the Taj Mahal for his mother!

 

ஆக்ராவில் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினார் ஷாஜஹான். திருவாரூரில் பெற்று வளர்த்த தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டியுள்ளார் மகன். தென்னகத்தின் தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

 

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில்  ஷேக்தாவுது - ஜெய்லானி பீவி தம்பதியருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வாழ்ந்து வருகின்றனர்.  ஷேக்தாவுது - ஜெய்லானி பீவி தம்பதியரின் மகனான அமுர்தீன் (49),  சென்னையில் தொழிலதிபராக உள்ளார். 

 

The son who built the Taj Mahal for his mother!

 

அமுர்தீனின் தந்தை ஷேக்தாவுது பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில், தாய் ஜெய்லானி பீவி கடந்த 2020 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

அமுர்தீன் தனது தாயார் ஜெய்லானி பீவிக்கு அம்மையப்பன் கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என விரும்பி உள்ளார். அப்போது தனது கிராமத்தின் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர், தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்தி வந்தது போன்று, தானும் தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு நினைவிடத்தை அமைக்கத் தீர்மானித்தார். 

 

The son who built the Taj Mahal for his mother!

 

காதல் மனைவிக்காக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போன்று தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் ஆக்ராவில் உள்ள முகலாய மன்னர் கால கட்டமைப்பைப் போன்றே தானும் கட்ட முடிவு செய்தார் அமுர்தீன். அதற்காக அவர் தாஜ்மஹால் வடிவத்தையே தேர்வும் செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு கட்டட வடிவமைப்பாளரை அமுர்தீன் அணுகி தன் திட்டத்தைச் சொன்னார். அந்த கட்டட வடிவமைப்பாளர் அமுர்தீன் நினைத்தபடியே தாஜ்மஹால் வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தார். 

 

அதன்பின் கட்டடப் பணியைத் துவங்கிய அமுர்தீன், தென்னக தாஜ்மஹாலுக்காக ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்குக் கற்களைக் கொண்டு வந்தார். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், 8 ஆயிரம் சதுர அடியில், ரூ. 5 கோடி மதிப்பில், இரண்டு ஆண்டுகளாகத் தனது தாய் ஜெய்லானி பீவியின் நினைவாகக் கட்டப்பட்டு வந்த தாஜ்மஹாலை கடந்த 2 ஆம் தேதி எளிமையாகத் திறந்தார். 

 

The son who built the Taj Mahal for his mother!

 

இதில் தனது தாயாரின் சமாதியையும் அமுர்தீன் அமைத்துள்ளார். மேலும், அந்த தாஜ்மஹாலில் ஒருபுறம் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதர்ஸா கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குச் சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்க்க அனைவராலும் முடியாத நிலையில், தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட முதல் தாஜ் மஹாலை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.  

 

ஜெய்லானி பீவி நினைவாகக் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலை அனைத்து சமுதாய மக்களும் பார்வையிட அவர் அனுமதித்துள்ளார். தற்போது அருகே உள்ள கிராம மக்கள் இந்த தாஜ்மஹாலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தனது தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டிய மகனைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.