சோனியா காந்தி குடும்பத்தினருக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
மக்களவையில் 'சிறப்பு பாதுகாப்பு குழு' (SPECIAL PROTECTION GROUP) தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை. சோனியா காந்தி குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் பேரில் பாதுக்காப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் பிறகு சிறப்பு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர்.