Published on 24/06/2019 | Edited on 24/06/2019
மக்களவை அண்மையில் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது. பதவியேற்பு, குடியரசு தலைவர் உரை என மக்களவை நடைபெற்ற நிலையில்,
![ranjan chowdry](http://image.nakkheeran.in/cdn/farfuture/SgjGKn9x6s8hSUiJj4xpto8Sm_aiLELfhPfEdQyGHeU/1561376205/sites/default/files/inline-images/ranjan-chowdry.jpg)
இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த தீர்மானத்தின்மீது பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது உரையில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
சோனியா காந்தி, ராகுல் காந்திய உங்களால் சிறையில் அடைக்க முடிந்ததா? 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? எங்களை திருடர்கள் என்றுகூறி நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள், அது உண்மையென்றால் எப்படி அவர்களால் தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்க முடியும்?