Skip to main content

ஹரியானா வன்முறை; காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடி கைது

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Congress MLA arrested for Haryana incident

 

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மேவாட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் வாகனம் உட்பட பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வன்முறை சம்பவத்தால் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

 

இதனிடையே, இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அண்மையில், காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், பசு காவலர் பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பிட்டு பஜ்ரங்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தான் மற்றொரு சமூகத்தினர் இந்த ஊர்வலத்தை மறித்துள்ளனர். மேலும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பிட்டு பஜ்ரங்கியை கைது செய்தனர். 

 

இதனிடையே, இந்த வன்முறைக்கு பெரோஷ்பூர் ஜஹிர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மமன் கான் தான் முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டி அவர்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மமன் கானுக்கு காவல்துறையினர் இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதே வேளை, இந்த வன்முறை வழக்கில் தன் பெயர் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கு தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மமன் கான் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், இந்த வழக்கு தொடர்பாக தன்னை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இந்த வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மமன் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் நேற்று (14-09-23) அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மமன் கான் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மமன் கானுக்கு தொடர்பு உள்ளதாக கைது செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வன்முறை நடந்த அந்த மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டு மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்.எம்.எஸ் சேவைகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ண எண்ண குறையாத பணம்; கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.350 கோடி - சிக்கிய காங். எம்.பி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து உள்துறை அமைச்சர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய போது, “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, எம்.பி., வீட்டில் இருந்து, இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது ஆனால் ஒட்டுமொத்த இந்தியக் கூட்டணியும் இந்த ஊழலைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால், ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்” என்றார். 

Next Story

“சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” - பிரதமர் வாழ்த்து

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
PM Modi wishes Sonia Gandhi on her birthday
கோப்புப்படம்

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “அர்ப்பணிப்புள்ள பொது வாழ்வின் எடுத்துக்காட்டாக விளங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில் அவரது ஆழ்ந்த தொலைநோக்கு பார்வையும் அனுபவச் செல்வமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.