Skip to main content

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த கம்பவுண்டர்; பெண்ணுக்கு நிகழ்ந்த கோரம்...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

xjtgx

 

ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண்ணுக்கு அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்த பொழுது அந்த குழந்தை கோரமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராம்கார் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட மருத்துவர் யாரும் பணியில் இல்லாததால் அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை வெளியே வர திணறிக்கொண்டிருந்த பொழுது அவர் அந்த குழந்தையை கவனக்குறைவாக வெளியே இழுத்துள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் மட்டும் அவர் கையில் வந்துவிட, தலை தனியாக துண்டிக்கப்பட்டு பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. சம்பவம் நிகழ்ந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாத அந்த கம்பவுண்டர் நஞ்சுக்கொடியை கூட அகற்றாமல் துண்டிக்கப்பட்ட உடலை மட்டும் பிணவறையில் வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு குழந்தைபிறப்பது கடினம் என உறவினர்களிடம் கூறி ஜெய்சால்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல கூறியிருக்கிறார். பிரச்னை பெரிதாகவே அதன்பிறகு அங்கு வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த தலையை நீக்கினர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை; 144 உத்தரவு பிறப்பிப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
144 Issuance of Order on incident due to conflict between two communities in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஐந்து காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் இரு சமூகங்களிடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று(21-06-24) திடீரென்று, அவர்கள் ஒன்று திரண்டு ஒருவரையொருவர் செங்கல் மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தீ வைத்து எரித்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்ற போது, அவர்களையும் மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், போலீசாரை தாக்கியதற்காகவும், கலவரத்தை தூண்டியதாகவும் பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஐந்து காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

‘மது வாங்கவில்லை’ - பட்டியலின இளைஞரை தலைகீழாகக் கட்டிவைத்து கொடூரத் தாக்குதல்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Incident happened on the scheduled caste youth in rajasthan

ராஜஸ்தான் மாவட்டம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர் வால்மீகி. இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ராமேஸ்வர் வால்மீகி மதுபானம் வாங்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மதுபான மாஃபியா கும்பல், வால்மீகியை அடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 14ஆம் தேதி ராமேஸ்வர் வால்மீகி தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்ட அந்தக் கும்பல், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில், ராமேஸ்வரின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்து பெரிய கம்பை கொண்டு அடிக்கின்றனர். மேலும், அவரை தலைக்கீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றனர் என்பதோடு வீடியோ முடிவடைகிறது. கொடூரத் தாக்குதலுக்கு ஆளான ராமேஸ்வர், மயக்கமடைந்ததை அடுத்து ஹரியானவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய தீபக் சிங், சுபாஷ், சதீஷ், பிரவீன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறியதாவது, “மோடி-பஜன்லால் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் உண்மை. பட்டியலினத்தவர்களின் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களை அடிக்கவும், கொலை செய்யவும் 400 இடங்களை பா.ஜ.க விரும்புகிறது. பா.ஜ.க எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் பட்டியலினத்தவர்கள் மீது சித்திரவதைகள் நடக்கின்றன. இதயத்தை உலுக்கும் இந்தச் சம்பவம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் இருந்து வருகிறது. ராமேஷ்வர் வால்மீகி என்ற பட்டியலின இளைஞர் எவ்வளவு இரக்கமின்றி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார் என்று பாருங்கள்” என்று தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.