Skip to main content

அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவில் இல்லை? அதிரவைத்த சீனா 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

China has released a map linking Arunachal Pradesh with the country

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனா நேற்று வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்துள்ளது.

 

இந்திய பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தை சீனா தங்கள் நாட்டுடன் சேர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சீனா வெளியிட்டுள்ள ‘ஸ்டாண்டர் மேப்’பில் அருணாச்சலப் பிரதேசம் அந்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

அந்த வரைபடத்தில் அருணாச்சலம், அக்சாய் சின் பகுதிகள் சீன எல்லைக்குள் அடங்கியுள்ளது. மேலும் இதில் தைவானையும் இணைத்துள்ளது சீனா. சீனாவின் இயற்கை வள அமைச்சகம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் 'ஜங்னன்' பகுதியை சீனா 'ஜிஜாங்' என குறிப்பிட்டு வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது.

 

சீனாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, “அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். தன்னிச்சையாக கண்டுபிடிக்கப்பட்ட எந்த சீன வரைபடமும் அதை மாற்ற முடியாது. இத்தகைய சட்டவிரோத பிரதிநிதித்துவம் அல்லது இந்தியாவின் பிரதேசங்களை மறுபெயரிடுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. சீனா உட்பட அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை விரும்புகிறோம். 

 

கல்வானுக்குப் பிறகு ‘எங்கள் எல்லைக்குள் யாரும் நுழையவில்லை’ என்று பிரதமர் மோடி, அவர்களுக்கு இலவச பாஸ் வழங்கியதை அடுத்து, 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மே 2020க்கு முந்தைய நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் மோடி அரசாங்கம் அதை மீட்டெடுப்பதை விட எதையும் விட்டுவிடக்கூடாது. இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு, உலக அரங்கில் இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல்களை அம்பலப்படுத்த மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எல்ஏசியில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியில் சட்டவிரோதமாக சீன ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவதை மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்” என தனது கடும் கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

 

சீனா அத்துமீறவில்லை என தொடர்ந்து மத்திய அரசு தரப்பிலிருந்தும் மத்திய அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சீனாவின் இந்த புதிய வரைபடம் மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்